Skip to main content

Posts

Showing posts from April 29, 2020

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...

சதுரகிரி மலை தல வரலாறு

சதுரகிரி மலை     சதுரகிரி   தல   வரலாறு   :     சதுரகிரி   மலை   அடிவாரத்திலுள்ள   கோட்டையூரில்   பிறந்தவன்   பச்சைமால் .   இவன்   பசுக்களை   மேய்த்து  பிழைத்தான் .   இவனது   பெற்றோர்   தில்லைக்கோன் -   திலகமதி .   மனைவி   சடைமங்கை .   இவள்   மாமனார்      வீட்டில்   பாலைக்   கொடுத்து   விட்டு   வருவாள் .   ஒருமுறை ,   பால்   கொண்டு   சென்ற   போது   எதிரில்   வந்த துறவி   அவளிடம்   குடிக்க   பால்   கேட்டார் .   சடைமங்கையும்   கொடுக்கவே ,   தினமும்   தனக்கு   பால்   தரும்படி  கேட்டார் .   சடைமங்கையும்   ஒப்புக்கொண்டாள் . வழக்கத்தை   விட   சற்று   பால்   குறைவதைக்   கவனித்த   சடைமங்கையின்   மாமனார் ,   இதுபற்றி   மகன் பச்சைமாலுக்கு   தெரிவித்து...