Skip to main content

Posts

Showing posts from May 2, 2020

யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள் - திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள் நன்றிகள் பல இந்த இணைய தளத்திற்கும் இந்த கட்டுரையை எழுதிய நிரஞ்சனா அவர்களுக்கும் மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள்.   யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் சாரூப பதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக சாயுச்சிய பதவி வேண்டும் என்று கேட்டுவிட்டார்கள். “நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.” என்று சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய யுகங்களில் சண்டன், பிரசண்டன் எனவும், சம்பாதி, சடாயு எனவும், சம்புகுந்தன், மாகுத்தன எனவும் இரண்டு இரண்டு பேராக...

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தல வரலாறு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தல வரலாறு நன்றிகள் பல இந்த இணைய தளத்திற்கும் விக்கி பீடியா இணைய தளத்திற்கும் .  தல வரலாறு இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது. 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 28 ஆவது ஸ்தலம் இது. அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் - வேதகிரீஸ்வரர், பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயில்). இறைவி - சொக்கநாயகி...