Skip to main content

Posts

Showing posts from July 15, 2020

சிவபுராணம் வரிகள் 36 - 40 விளக்கம்

வெய்யாய் ,  தணியாய் ,  இயமானனாம்   விமலா பொய்   ஆயின   எல்லாம்   போய்   அகல   வந்தருளி மெய்   ஞானம்   ஆகி   மிளிர்   கின்ற   மெய்ச்   சுடரே எஞ்ஞானம்   இல்லாதேன்   இன்பப்   பெருமானே அஞ்ஞானம்   தன்னை   அகல்விக்கும்   நல்   அறிவே வெய்யாய் - விரும்புதற்குரிய, தணியாய் - மனதின் வேகத்தை தணித்து, இயமானன்- ஆன்மா, அகக்கடவுள், ஆம் -தங்கியுள்ள, விமலா - மாசற்றவன், குற்றமற்றவன், தூயவன் பொய் - மாயை,  அகல - விலகுதல், நீங்குதல் ,  மெய்- உண்மை, ஞானம் - அறிவு, மெய்ச்சுடரே- கடவுளை ஒளியாய் வர்ணித்தல், எஞ்ஞானம் - எந்த ஒரு அறிவும், இல்லாதேன் - இல்லாத எனக்கு,  இன்பப் பெருமானேகம்= இ + அப்பெருமானே, இ என்றால் விளக்கமற்ற, தெளிவற்ற, குழப்பமான, நுண்மையாய் மறைந்திருக்கிற என்கிற பொருள். (In English, appear dark, gloomy or indistinct) அஞ்ஞானம் =  அந்த + ஞானம்...

சிவபுராணம் வரிகள் 33 - 35 விளக்கம்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே   உய்ய - பிழைக்குமாறு அருள் செய்தவன், என் உள்ளம் - என் ஆன்மா,   நின்ற - எப்பொழுதும் , ஓ - தங்குதல் , காரமாய்   -   மெய்ப்பொருளாய், உறுதியாய்,   மெய்யா - மெய்ப்பொருள், கடவுள்,   விமலா - மாசற்றவன், குற்றமற்றவன், தூயவன்   விடைப்பாகா - நந்தியை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர்,   வேதங்கள் - 4 மறை நூல்கள் , ஐயா   -   மூத்தோர் , பெரியோர் , ஓங்கி - உயர்ந்து , ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த , விசாலமான ,   நுண்ணியனே -. நுட்பமானவன் ( மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம் ) இறைவன் தன் திருவடியைக் காட்டி மாணிக்கவாசகரை ஆட்கொண்டதினால் , என்னை உய்வித்தவனே , அதாவது என் வினைகளை எல்லாம் நீக்கி என்னை காப்பாற்றியவனே என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் . என்னுடைய ஆன்மாவாக , மெய்ப்பொருளாய் எப்பொழுதும் இருப்பவனே !   மெய்ப்பொருளே , மாசற்றவனே , தூயவனே , நந்தியை தன் சொற...

சிவபுராணம் வரிகள் 26 - 30 விளக்கம்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்   வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் . புல்   - புல்லாகியும், பூடு   - சிறு செடி மற்றும் உள்ளிப்பூண்டு,   புழு   - புழுவாகியும், மரமாகி - மரமாகியும், பல்விருகமாகி - பல மிருகங்களாகியும், பறவையாய் - பறவையாகியும், பாம்பாகி - பாம்பாகியும், கல்லாய்   - கல்லாகியும், மனிதராய் - மனிதராகியும், பேயாய் - பேயாகியும், கணங்களாய்   - பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவராய் - முனிவராகியும், தேவராய் - தேவராகியும், செல்லா - பயனற்ற, மதிப்பிழந்த ,   தாவர சங்கமம் - அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்கள், இளைத்தேன் - சோர்வுற்றேன், தளர்ந்தேன் , மெய்யே - மெய்ப்பொருள், கடவுள்,   பொன்   - அழகு, ஒளி, வீடு - வினைநீக்கம், உற்றேன் - அடை...