Skip to main content

Posts

Showing posts from July 6, 2020

புறத்தார்க்குச் சேயோன் வரிக்கு விளக்கம்

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க , ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க , ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற வரிகளை ஒன்றாக சேர்த்துப் பார்க்கும் பொழுது , என்   நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல் , ஆன்மாவாய் , மனசாட்சியாய் , என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று படிப்பவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருப்பதை உணருமாறு மாணிக்கவாசகர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம் . ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன் . அதாவது நமக்கு புரியும் வகையில் , பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள் என்று ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்கிற வரியில் பார்த்தோம் . ஆக இறைவன் என்பவன் நம் உள்ளத்தில் , அதாவது நம் அகத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை மிகத்தெளிவாக முந்திய வரிகளில் மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார் . அதாவது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் , இறைவன் என்பவன் அகத்தார் . அகத்தார் என்றால் உடனுறைபவர்...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...