Skip to main content

Posts

Showing posts from April 22, 2020

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 4 (வரிகள் 60- 70)

விருந்தின னாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு அட்ட மாசித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு காடது தன்னில் கரந்த கள்ளமும் விருந்தம் -   பூவின் காம்பு , அணண் - கடவுள் , இறைவன் , வெண்காடு - முருந்தம் , வெண்மை , குருந்து -   வெண்குருத்து , ஒருவகை மரம் கீழன்றிருந்த - கீழ் + அன்றி + இருந்த , அன்றி - அதுமட்டுமல்லாது கொள்கையும் - நிகழ்ச்சி பட்ட மங்கை - பட்டமங்கலம் என்னும் திருத்தலம் , பாங்காய் - மரியாதை உள்ளவன் , குருவாய் ,   அட்டமாசித்தி - எட்டுவிதசித்தி , அது - ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர் ( நிகழ்ச்சியும் ) வேடுவன் - பரன் , கடவுள் , இறைவன் ,   ஆகி - குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் , காடது - அளவில்லா தன்மை , கரந்த - ஒளி , கள்ளமும் - மறைந்த பூவின் காம்பு ஆ...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...