Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 4 (வரிகள் 60- 70)



விருந்தின னாகி வெண்காடதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடது தன்னில் கரந்த கள்ளமும்

விருந்தம் -  பூவின் காம்பு, அணண்- கடவுள், இறைவன், வெண்காடு - முருந்தம், வெண்மை, குருந்து -  வெண்குருத்து, ஒருவகை மரம்
கீழன்றிருந்த - கீழ் + அன்றி + இருந்த , அன்றி - அதுமட்டுமல்லாது
கொள்கையும் - நிகழ்ச்சி
பட்ட மங்கை - பட்டமங்கலம் என்னும் திருத்தலம், பாங்காய்- மரியாதை உள்ளவன், குருவாய்,  அட்டமாசித்தி - எட்டுவிதசித்தி,
அது - ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர் ( நிகழ்ச்சியும்)
வேடுவன் - பரன், கடவுள், இறைவன்,  ஆகி - குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல், காடது - அளவில்லா தன்மை, கரந்த - ஒளி, கள்ளமும் - மறைந்த

பூவின் காம்பு ஆகி  மரத்தின் கீழ் இருந்தது மட்டுமன்றி, பட்டமங்கலம் என்னும் திருத்தலத்தில் குருவாய் இருந்து எட்டுவித சித்திகளையும் சொல்லிக்கொடுத்த நிகழ்ச்சியும், கடவுளாக இருந்து வேண்டிய உருவம் எடுத்து, அளவற்ற தன்மையில் ஒளியாய் மறைந்ததும்

குறிப்பு: பாரிசாதப் பூவின் தாரின் (காம்புப் பகுதி) படிமம் திருப்பூவணத்தில் (சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்) சிவலிங்கமாக உள்ளது. இது 1728 கோடி வருடங்களுக்கு முன்பு பூமிக்குள்ளே புதைந்து படிமமாக உள்ளது.
Source: https://ta.wiktionary.org/wiki/பாரிசாதம்


மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

மெய் - உடல், முழு உருவம், இட்டு -  குழந்தை, வேண் - வேடம்,
 தக்கார்- பெருமையிற் சிறந்தோர்,மேன்மையுடையவனாக, உறவினர், ஒருவன் - ஒப்பற்றவன்
ஓரி -கிழநரி, (முதியவன் உருவில் தந்திரமாக வந்து), ஊர் - ஒருவருக்கு உதவும் விதமாக செய்யும் செயல் அல்லது அவர்களின்  மன்னிப்பை  கோரும் விதமாக செய்யும் செயல் (act in an obsequious way in order to obtain someone's forgiveness or favour,) உகந்த - சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்,
பார் - உலகம், உலக பந்தம் ஈரும் - அறுக்கும், பரிசு - சன்மானம், வெகுமதி கொடுத்தல் 
பாண்டூர் - பாண்டூர் என்னும் திருத்தலம், ஈண்ட - அழித்து

குழந்தை உருவமாக வேடம் எடுத்து, மேன்மை உடையவனாக, ஒப்பற்ற வனாக, முதியவன் உருவில் தந்திரமாக வந்து, சூழ்நிலைக்கு ஏற்ப தன் அடியவருக்கு  ( கௌரி என்கிற சிவபக்தை) உதவி செய்யும் விதமாக, குழந்தையாகி, அவளுடைய உலக பந்தத்தை அறுத்து முக்தி என்னும் சன்மானத்தை கொடுத்தது. பாண்டூர் என்னும் திருத்தலத்தில் பாண்டவர்களின் பாண்டு ரோகத்தை அழித்தது.




Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...