Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 4 (வரிகள் 60- 70)



விருந்தின னாகி வெண்காடதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடது தன்னில் கரந்த கள்ளமும்

விருந்தம் -  பூவின் காம்பு, அணண்- கடவுள், இறைவன், வெண்காடு - முருந்தம், வெண்மை, குருந்து -  வெண்குருத்து, ஒருவகை மரம்
கீழன்றிருந்த - கீழ் + அன்றி + இருந்த , அன்றி - அதுமட்டுமல்லாது
கொள்கையும் - நிகழ்ச்சி
பட்ட மங்கை - பட்டமங்கலம் என்னும் திருத்தலம், பாங்காய்- மரியாதை உள்ளவன், குருவாய்,  அட்டமாசித்தி - எட்டுவிதசித்தி,
அது - ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர் ( நிகழ்ச்சியும்)
வேடுவன் - பரன், கடவுள், இறைவன்,  ஆகி - குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல், காடது - அளவில்லா தன்மை, கரந்த - ஒளி, கள்ளமும் - மறைந்த

பூவின் காம்பு ஆகி  மரத்தின் கீழ் இருந்தது மட்டுமன்றி, பட்டமங்கலம் என்னும் திருத்தலத்தில் குருவாய் இருந்து எட்டுவித சித்திகளையும் சொல்லிக்கொடுத்த நிகழ்ச்சியும், கடவுளாக இருந்து வேண்டிய உருவம் எடுத்து, அளவற்ற தன்மையில் ஒளியாய் மறைந்ததும்

குறிப்பு: பாரிசாதப் பூவின் தாரின் (காம்புப் பகுதி) படிமம் திருப்பூவணத்தில் (சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்) சிவலிங்கமாக உள்ளது. இது 1728 கோடி வருடங்களுக்கு முன்பு பூமிக்குள்ளே புதைந்து படிமமாக உள்ளது.
Source: https://ta.wiktionary.org/wiki/பாரிசாதம்


மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

மெய் - உடல், முழு உருவம், இட்டு -  குழந்தை, வேண் - வேடம்,
 தக்கார்- பெருமையிற் சிறந்தோர்,மேன்மையுடையவனாக, உறவினர், ஒருவன் - ஒப்பற்றவன்
ஓரி -கிழநரி, (முதியவன் உருவில் தந்திரமாக வந்து), ஊர் - ஒருவருக்கு உதவும் விதமாக செய்யும் செயல் அல்லது அவர்களின்  மன்னிப்பை  கோரும் விதமாக செய்யும் செயல் (act in an obsequious way in order to obtain someone's forgiveness or favour,) உகந்த - சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்,
பார் - உலகம், உலக பந்தம் ஈரும் - அறுக்கும், பரிசு - சன்மானம், வெகுமதி கொடுத்தல் 
பாண்டூர் - பாண்டூர் என்னும் திருத்தலம், ஈண்ட - அழித்து

குழந்தை உருவமாக வேடம் எடுத்து, மேன்மை உடையவனாக, ஒப்பற்ற வனாக, முதியவன் உருவில் தந்திரமாக வந்து, சூழ்நிலைக்கு ஏற்ப தன் அடியவருக்கு  ( கௌரி என்கிற சிவபக்தை) உதவி செய்யும் விதமாக, குழந்தையாகி, அவளுடைய உலக பந்தத்தை அறுத்து முக்தி என்னும் சன்மானத்தை கொடுத்தது. பாண்டூர் என்னும் திருத்தலத்தில் பாண்டவர்களின் பாண்டு ரோகத்தை அழித்தது.




Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...