Skip to main content

Posts

Showing posts from April 27, 2020

திருவாஞ்சியம் தலவரலாறு

வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் திருவாஞ்சியம் தகவல்கள் எடுக்கப்பட்ட வலைத்தளம். நன்றிகள் பல அந்த வலைத்தளத்திற்கு.   இறைவர் திருப்பெயர் :   ஸ்ரீ வாஞ்சியநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் :   வாழவந்தநாயகி, மங்களநாயகி தேவாரப்பதிகம் :   திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1 காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.  பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெர...

சக்தி சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு!

உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு ! நன்றி தினமணி வலைத்தளம் கையிலாய மலையில் மாணிக்க மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் அமர்ந்து விஷ்ணு , பிரம்மா , தேவர்கள் , சித்தர்கள் , முனிவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் தந்து அருளிக் கொண்டிருந்தார் . வந்தவர்கள் எல்லோரும் சென்றுவிட்ட நிலையில் , ஒரு முனிவர் சிவபெருமானை மட்டும் பணிந்து வணங்கி விட்டுச் செல்ல ஆரம்பித்தார் . அதைப் பார்த்த பார்வதி தேவி துணுக்குற்று சிவபெருமானை நோக்கி "" ஸ்வாமி ! என்னைச் சிறிதும் மதியாமல் தங்களை மட்டும் நமஸ்கரித்துவிட்டுச் செல்லும் இந்த முனிவர் யார் ?'' என்று வினவினார் . அதற்குச் சிவன் , " தேவி ! சகலமும் சிவனே , அனைத்தும் சிவமயமே '' என்று உறுதியாய் நினைத்துச் செயல்படும் வீரன் இந்த முனிவன் . பிருங்கி என்று பெயர் படைத்தவன் '' என்றார் . " எல்லாமே சிவமயமா இவனுக்கு ? இருக்கட்டும் . இவன் செருக்கை அடக்குகிறேன் ' என்று எண்ணிய உமை , பிருங்கி முனிவரது உடலில் சக்தியின் கூறாக உள்ள ரத்தம் , தசை முதலியவ...