Skip to main content

சிவபுராணம் நமசிவாய வாழ்க வரிக்கு விளக்கம்



ஓம் நமசிவாயா,  சிவபுராண விளக்கம் 

ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைநிறைய உப்பை போட்டு கலக்குங்கள். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வீர்கள். அந்த உப்பை இப்பொழுது என்னிடம் காட்ட முடியுமா அல்லது நீங்கள் போட்ட இரண்டு கையில்  உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா  என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது என்று சொல்வீர்கள். தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம் ஆனால் அந்த உப்பின் தன்மையை உணரமுடியும். அந்த தண்ணீரை எடுத்து நான் சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போலத்தான் அவனை உணரத்தான் முடியும். இதைதான் மாணிக்கவாசகர்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் 
என்று சொல்லியிருக்கிறார். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றில், திருவாசகத்தின் பொருள் இறைவன்தான் என்று  மிகத் தெளிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது. தில்லை அந்தணர் சபை, திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்க,  திருவாதவூரார்  தில்லை சிற்றம்பலத்தின் கருவறையை சுட்டிக் காட்டி, இந்த பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார். ஆக, திருவாசகத்தின் முழுமுதற் பொருளாக இருப்பவன் நம்முடைய பாட்டுடைத் தலைவன், அங்கிங்கெனாதபடி ஒளியாய் நிறைந்திருக்கும் நம்முடைய சிவன். சிவபுராணத்தின்  வரியான நாதன் தாள் வாழ்க என்பதற்கு எளிமையான விளக்கமும் உண்டு. அதாவது நாதன் என்றால் தலைவன், அரசன், கணவன், சிவன் என்று பல்வேறு விதமான அர்த்தங்களை நாதன் என்று சொல் குறிக்கிறது. எனவே, நம் அனைவருக்கும் தலைவனான, அரசனான, சிவனை வாழ்க என்று வாயார வாழ்த்துகிறார் என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். நாதன் என்ற சொல்லை பிரித்தால், நாதன் = நா + தன்;  நா என்றால் பாடல் மற்றும் சொல் என்று பொருள்.  நா என்பதன் மற்றொரு பொருள்  தீயின் சுடர்,  தன்  என்றால் திட்டவட்டமாக அதாவது தெளிவாக வரையறுக்கப்பட்ட என்று பொருள். எனவே, பாடலாக இருக்கும் அதாவது திருவாசகமாக இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று பொருள் கொள்ளலாம். மற்றும் தீயாய், ஜோதியாய் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க என்றும் பொருள் கொள்ளலாம். திருவாசகம் முழுவதுமே மாணிக்கவாசகர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்படுமாறு திருவாசகத்தை பாடியிருக்கிறார். எனவே இங்கு சிவன் தீயாக, பாடலாக இருக்கிறான் என்பதை திட்டவட்டமாக, வரையறுத்துக் மாணிக்கவாசகர் சொல்கிறார் என்று  என்று நம்மால் பொருள்கொள்ள முடியும். மாணிக்கவாசகர் நேரில் வந்து இந்த பாடலுக்கு, இந்த வரிக்கு இதுதான் பொருள் என்று சொன்னால் ஒழிய வேறு யாராலும் இதுதான் பொருள் என்று திட்டவட்டமாக வரையறுத்து சொல்ல இயலாது. ஆனால் என்னுடைய பார்வையில், என்னுடைய குரு சீரடி சாய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழகராதி உதவியோடு சிவபுராணத்திற்கு விளக்கம் எழுதியுள்ளேன். அதனை தினமும் தினமும் சில வரிகளுக்கு பகிர்ந்துகொள்கிறேன்.  சிவபுராணத்தின் முதல் வரியான நமசிவாய வாழ்க என்கிற வரிக்கு கீழ்க்கண்ட வீடியோ பதிவில் என்னுடைய புரிதலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...