Skip to main content

சிவபுராணம் நமசிவாய வாழ்க வரிக்கு விளக்கம்



ஓம் நமசிவாயா,  சிவபுராண விளக்கம் 

ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கைநிறைய உப்பை போட்டு கலக்குங்கள். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வீர்கள். அந்த உப்பை இப்பொழுது என்னிடம் காட்ட முடியுமா அல்லது நீங்கள் போட்ட இரண்டு கையில்  உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா  என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது என்று சொல்வீர்கள். தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம் ஆனால் அந்த உப்பின் தன்மையை உணரமுடியும். அந்த தண்ணீரை எடுத்து நான் சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போலத்தான் அவனை உணரத்தான் முடியும். இதைதான் மாணிக்கவாசகர்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் 
என்று சொல்லியிருக்கிறார். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றில், திருவாசகத்தின் பொருள் இறைவன்தான் என்று  மிகத் தெளிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது. தில்லை அந்தணர் சபை, திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்க,  திருவாதவூரார்  தில்லை சிற்றம்பலத்தின் கருவறையை சுட்டிக் காட்டி, இந்த பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார். ஆக, திருவாசகத்தின் முழுமுதற் பொருளாக இருப்பவன் நம்முடைய பாட்டுடைத் தலைவன், அங்கிங்கெனாதபடி ஒளியாய் நிறைந்திருக்கும் நம்முடைய சிவன். சிவபுராணத்தின்  வரியான நாதன் தாள் வாழ்க என்பதற்கு எளிமையான விளக்கமும் உண்டு. அதாவது நாதன் என்றால் தலைவன், அரசன், கணவன், சிவன் என்று பல்வேறு விதமான அர்த்தங்களை நாதன் என்று சொல் குறிக்கிறது. எனவே, நம் அனைவருக்கும் தலைவனான, அரசனான, சிவனை வாழ்க என்று வாயார வாழ்த்துகிறார் என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். நாதன் என்ற சொல்லை பிரித்தால், நாதன் = நா + தன்;  நா என்றால் பாடல் மற்றும் சொல் என்று பொருள்.  நா என்பதன் மற்றொரு பொருள்  தீயின் சுடர்,  தன்  என்றால் திட்டவட்டமாக அதாவது தெளிவாக வரையறுக்கப்பட்ட என்று பொருள். எனவே, பாடலாக இருக்கும் அதாவது திருவாசகமாக இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று பொருள் கொள்ளலாம். மற்றும் தீயாய், ஜோதியாய் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க என்றும் பொருள் கொள்ளலாம். திருவாசகம் முழுவதுமே மாணிக்கவாசகர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்படுமாறு திருவாசகத்தை பாடியிருக்கிறார். எனவே இங்கு சிவன் தீயாக, பாடலாக இருக்கிறான் என்பதை திட்டவட்டமாக, வரையறுத்துக் மாணிக்கவாசகர் சொல்கிறார் என்று  என்று நம்மால் பொருள்கொள்ள முடியும். மாணிக்கவாசகர் நேரில் வந்து இந்த பாடலுக்கு, இந்த வரிக்கு இதுதான் பொருள் என்று சொன்னால் ஒழிய வேறு யாராலும் இதுதான் பொருள் என்று திட்டவட்டமாக வரையறுத்து சொல்ல இயலாது. ஆனால் என்னுடைய பார்வையில், என்னுடைய குரு சீரடி சாய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழகராதி உதவியோடு சிவபுராணத்திற்கு விளக்கம் எழுதியுள்ளேன். அதனை தினமும் தினமும் சில வரிகளுக்கு பகிர்ந்துகொள்கிறேன்.  சிவபுராணத்தின் முதல் வரியான நமசிவாய வாழ்க என்கிற வரிக்கு கீழ்க்கண்ட வீடியோ பதிவில் என்னுடைய புரிதலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...