Skip to main content

இமைப்பொழுதும் என் நெஞ்சில் வரிக்கு விளக்கம்


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
 தன் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவனை இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என்று வாழ்த்துகிறார். இங்கு மாணிக்கவாசகர், தான் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவில்லை அதற்கு பதிலாக இறைவன் அவர் மேல் கருணைகொண்டு அவருடைய நெஞ்சில் நீங்காமல் இருக்கிறார் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். இன்று நம்மில் பல பேர் தாங்கள் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அவ்வாறு சொல்வது கூட நான் என்ற அகங்காரத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்பதினாலேயே மாணிக்கவாசகர் இங்கே இறைவன் தன் மேல் கருணைகொண்டு தன் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்று சொல்லி இறைவனின் திருப்பாதங்களை போற்றுகிறார். இறைவனின் கருணை இல்லையெனில் நம்மால் இறைவனை நினைக்க இயலாது என்பதை மிக அழகாக மாணிக்கவாசகர் இங்கே சுட்டிக்காட்டியுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். அதற்கு முதலில் நாம் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிற வரியை புரிந்து கொள்வோம். என்றால் ஆன்மா, கமம் என்றால் நிறைந்து, ஆகி - மாறி, நின்று - எப்பொழுதும், அண்ணிப்பான் - பக்கத்திலிருப்பவன். இந்த வரியின் முழுப் பொருள் என்னவென்று பார்த்தால், சிவன் நம் ஆன்மாவாக நிறைந்து, எப்பொழுதும்  நம் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள். இறைவன் ஆன்மாவாக நமக்குள் எப்பொழுதும் இருப்பதினால், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.  ஆகமம் என்கிற வார்த்தைக்கு வேதங்கள் என்றும் ஒரு பொருள் உண்டு. கீர்த்தித் திருவகவலின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிகளில் வரும் ஆகமம் என்கிற வார்த்தை வேதம் என்று பொருள்படும்.

மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்

எந்த மொழி எடுத்தாலும் ஒரு வார்த்தைக்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் present என்கிற வார்த்தையை பார்ப்போம். Birthday Present என்கிற வார்த்தைகளில் பிரசெண்ட் என்பது பரிசு என்று பொருள்படுகிறது. At Present, it is not possible இந்த இடத்தில் வரும் பிரசன்ட் என்கிற வார்த்தை, இப்பொழுது என்று பொருள்படும். என்னிடம் ஒரு அடியவர் பேசும்பொழுது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னார். அவர் தன்னுடைய மூன்று வயது பேரக்குழந்தையுடன் போனில் பேசும் பொழுது மணியுடன் பேசுகிறாயா? என்று தன்னுடைய உறவுகார குழந்தையின் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தக் குழந்தைக்கு மணி என்றவுடன் பணம் மற்றும் கோவில்மணி மட்டுமே நினைவிற்கு வந்தமையால் மணியுடன் எப்படி பேசுவது? அது பேசாதே என்று அந்த குழந்தை வியப்புடன் சொல்லியிருக்கிறது. தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறை பாடல்களை படிக்கும் பொழுது நாம் அந்த குழந்தையின் நிலையில் தான் இருக்கிறோம். திருமுறைகளில் பாடப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும், பல்வேறு விதமான பொருள்களை அர்த்தங்களை அந்த இடத்திற்கு தகுந்தார் போல், வரியில் வரும் மற்ற வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் பொருள் மாறுபடுகிறது. இறைவன் நம் நெஞ்சில் ஆன்மாவாக நிறைந்திருக்கிறான், நம்மை விட்டு இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்பதை உணர்வோம், இறைவனை போற்றித் துதிப்போம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...