Skip to main content

இமைப்பொழுதும் என் நெஞ்சில் வரிக்கு விளக்கம்


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
 தன் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவனை இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என்று வாழ்த்துகிறார். இங்கு மாணிக்கவாசகர், தான் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவில்லை அதற்கு பதிலாக இறைவன் அவர் மேல் கருணைகொண்டு அவருடைய நெஞ்சில் நீங்காமல் இருக்கிறார் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். இன்று நம்மில் பல பேர் தாங்கள் இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அவ்வாறு சொல்வது கூட நான் என்ற அகங்காரத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்பதினாலேயே மாணிக்கவாசகர் இங்கே இறைவன் தன் மேல் கருணைகொண்டு தன் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்று சொல்லி இறைவனின் திருப்பாதங்களை போற்றுகிறார். இறைவனின் கருணை இல்லையெனில் நம்மால் இறைவனை நினைக்க இயலாது என்பதை மிக அழகாக மாணிக்கவாசகர் இங்கே சுட்டிக்காட்டியுள்ளார் என்று பொருள் கொள்ளலாம். இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். அதற்கு முதலில் நாம் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிற வரியை புரிந்து கொள்வோம். என்றால் ஆன்மா, கமம் என்றால் நிறைந்து, ஆகி - மாறி, நின்று - எப்பொழுதும், அண்ணிப்பான் - பக்கத்திலிருப்பவன். இந்த வரியின் முழுப் பொருள் என்னவென்று பார்த்தால், சிவன் நம் ஆன்மாவாக நிறைந்து, எப்பொழுதும்  நம் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள். இறைவன் ஆன்மாவாக நமக்குள் எப்பொழுதும் இருப்பதினால், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.  ஆகமம் என்கிற வார்த்தைக்கு வேதங்கள் என்றும் ஒரு பொருள் உண்டு. கீர்த்தித் திருவகவலின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிகளில் வரும் ஆகமம் என்கிற வார்த்தை வேதம் என்று பொருள்படும்.

மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்

எந்த மொழி எடுத்தாலும் ஒரு வார்த்தைக்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் present என்கிற வார்த்தையை பார்ப்போம். Birthday Present என்கிற வார்த்தைகளில் பிரசெண்ட் என்பது பரிசு என்று பொருள்படுகிறது. At Present, it is not possible இந்த இடத்தில் வரும் பிரசன்ட் என்கிற வார்த்தை, இப்பொழுது என்று பொருள்படும். என்னிடம் ஒரு அடியவர் பேசும்பொழுது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னார். அவர் தன்னுடைய மூன்று வயது பேரக்குழந்தையுடன் போனில் பேசும் பொழுது மணியுடன் பேசுகிறாயா? என்று தன்னுடைய உறவுகார குழந்தையின் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தக் குழந்தைக்கு மணி என்றவுடன் பணம் மற்றும் கோவில்மணி மட்டுமே நினைவிற்கு வந்தமையால் மணியுடன் எப்படி பேசுவது? அது பேசாதே என்று அந்த குழந்தை வியப்புடன் சொல்லியிருக்கிறது. தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறை பாடல்களை படிக்கும் பொழுது நாம் அந்த குழந்தையின் நிலையில் தான் இருக்கிறோம். திருமுறைகளில் பாடப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும், பல்வேறு விதமான பொருள்களை அர்த்தங்களை அந்த இடத்திற்கு தகுந்தார் போல், வரியில் வரும் மற்ற வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் பொருள் மாறுபடுகிறது. இறைவன் நம் நெஞ்சில் ஆன்மாவாக நிறைந்திருக்கிறான், நம்மை விட்டு இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கிறான் என்பதை உணர்வோம், இறைவனை போற்றித் துதிப்போம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...