Skip to main content

புறத்தார்க்குச் சேயோன் வரிக்கு விளக்கம்


புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்ற வரிகளை ஒன்றாக சேர்த்துப் பார்க்கும் பொழுது, என்  நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காமல், ஆன்மாவாய், மனசாட்சியாய், என்னுள் இருக்கும் இறைவன் தாள் வாழ்க என்று படிப்பவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருப்பதை உணருமாறு மாணிக்கவாசகர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம். ஏகன் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் மிக அழகானதொரு பொருள் அகத்துரைப்போன். அதாவது நமக்கு புரியும் வகையில், பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் மனசாட்சி என்று பொருள் என்று ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்கிற வரியில் பார்த்தோம். ஆக இறைவன் என்பவன் நம் உள்ளத்தில், அதாவது நம் அகத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை மிகத்தெளிவாக முந்திய வரிகளில் மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார். அதாவது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் என்பவன் அகத்தார். அகத்தார் என்றால் உடனுறைபவர். புறம் என்றால் வெளியிடம் என்று பொருள். சேயோன் என்றால் தொலைவிலிருப்பவன் என்று பொருள். இறைவன் என்பவன் அகத்தில் இல்லை, புறத்தில் எங்கோ இருக்கிறான் என்று தேடுபவர்களை மாணிக்கவாசகர், புறத்தார் என்று அழைக்கிறார். இதைத்தான் கண்ணதாசன் மிக அழகாக,

 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமேஎன்று பாடியிருப்பார்.

இறைவன் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறான், சிவனின் தன்மை என்றும் மாறுவதில்லை.  ஆனால் அதை உணராது வெளியே தேடுபவர்களுக்கு இறைவன் தொலைவில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். இன்றைய நடைமுறை வாழ்வில் ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், ஒரு பொருள் தொலைந்து விட்டதாக நினைத்து எங்கெங்கோ தேடுவார், கடைசியில் அது அவர்களின் சட்டைப் பையில் இருக்கும். அதுபோல அகத்தின் உள்ளே ஆன்மாவாய், மனசாட்சியாய் இமைப்பொழுதும் நீங்காமல் இருக்கும் இறைவனை உணராமல் வெளியே தேடுபவர்களுக்காக மாணிக்கவாசகர் புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க என்று பாடுகிறார்.

இன்றைய வாழ்க்கை கோணத்தில் இந்த வரியை பார்ப்போம்.  புறத்தல் என்றால் ஒதுக்கி தள்ளுதல் என்று பொருள்.   இறைவன் என்பவன் அகத்தாராய், நம்முள் உடனுறைபவராய், அகத்துரைப்போனாய் இருக்கிறான்.  நம் உள்ளத்தில், மனசாட்சியாய் இருக்கும் இறைவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனசாட்சி இல்லாமல், தன்னிஷ்டப்படி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இறைவன் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறான் என்று மணிக்கவாசகர் சொல்வதாக பொருள் கொள்ளலாம். மனசாட்சியை ஒதுக்கித் தள்ளியவர்களை, புறத்தார் என்று மாணிக்கவாசகர் கூறுவதாக இங்கு பொருள் கொள்ளலாம்.  ஒவ்வொரு உயிருக்குள்ளும், ஆன்மாவாய் இறைவன் இருக்கிறான் என்பதால் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். இதை உணர்ந்து, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு உயிரையும் மதித்து, நம்மால் முடிந்த உதவியை பிற உயிர்களுக்கு செய்வதன் மூலம் இறைவனை போற்றி  வணங்குவோம்.

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும்  அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...