ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் பித்ரு தர்ப்பணம் , பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை குறித்து ஒரு பதிவு பார்த்தோம் . அதைத்தொடர்ந்து மோட்சதீபம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம் . இந்தப் பதிவு , எனது குரு சாய் அவர்களினால் உணர்த்தப்பட்ட ஒரு பதிவு . பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள் அல்லது பித்ரு தோஷம் குறித்து செய்யப்படும் பரிகாரங்கள் அனைத்தும் செய்பவருக்கு நல்லது நடக்கும் என்கிற ஒரு கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்படுகிறது . அதாவது சுயநலத்தோடு செய்யப்படுகிறது . இந்தக் கண்ணோட்டத்தில் பித்ரு கடமைகள் செய்யும் பொழுது அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி செய்யப்படும் பொழுது அதனுடைய முழு பலன்கள் செய்பவருக்கு சென்றடைவதில்லை . பித்ரு கடமை அல்லது பித்ருதோஷம் நிவர்த்திகள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால் அதிலிருந்து அவர்களுக்கு விடுபட நாம் செய்யும் பித்ரு தர்ப்பணம் ,
இந்தப் பதிவு சித்தர் உலகம் முகநூலில் பதியப்பட்ட ஒரு பதிவு .அது மிகவும் பெரிதாக இருந்ததால்தான் அதனை அப்படியே பிரதி எடுத்து இங்கு கொடுத்திருக்கிறோம். சிவாயநம பிலவ வருடம் தைமாதம் 18ம் நாள் திங்கட்கிழமை 31.01.2022 உத்திராடம் திருவோணம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தை நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க கிராமங்களில் இப்போது சாத்திரங்களை அறிந்தவர்கள் அநேகமாக இல்லை. நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை அறிவியல் பூர்வமானவை. உதாரணமாக, நட்சத்திரம் என்றால் என்ன என்று மேலை நாட்டுக்காரர்களுக்கு தெரியும். ஆனால் 'திதி' என்றால் என்ன என்று அவர்களுக்கு இன்னும் தெரியாது. ஆனால், திதியின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து கூறிவிட்டனர். பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்கள