Skip to main content

மோட்ச தீபம் குறித்த விஷயங்கள்!

 


ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் பித்ரு தர்ப்பணம்பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை குறித்து ஒரு பதிவு  பார்த்தோம்அதைத்தொடர்ந்து மோட்சதீபம் குறித்து இந்தப்   பதிவில் பார்ப்போம்இந்தப் பதிவுஎனது குரு சாய் அவர்களினால் 

உணர்த்தப்பட்ட ஒரு பதிவு பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள் 

அல்லது பித்ரு தோஷம் குறித்து செய்யப்படும் பரிகாரங்கள் 

அனைத்தும் செய்பவருக்கு நல்லது நடக்கும் என்கிற ஒரு 

கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்படுகிறதுஅதாவது 

சுயநலத்தோடு செய்யப்படுகிறதுஇந்தக் கண்ணோட்டத்தில் பித்ரு கடமைகள் செய்யும் பொழுது அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி 

செய்யப்படும் பொழுது அதனுடைய முழு பலன்கள் செய்பவருக்கு 

சென்றடைவதில்லைபித்ரு கடமை அல்லது பித்ருதோஷம் 

நிவர்த்திகள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் நம்முடைய 

முன்னோர்களின் ஆன்மாக்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால் 

அதிலிருந்து அவர்களுக்கு விடுபட நாம் செய்யும் பித்ரு தர்ப்பணம்

சிரார்த்தம் அல்லது தெவசம் மற்றும் மோட்சதீபம் போன்றவை உதவிசெய்யும்அவ்வாறு நாம் உதவி செய்யும் பொழுதுஅந்த 

ஆன்மாக்கள் தங்கள் படுகின்ற கஷ்டங்களில் இருந்து 

துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் பொழுதுஅவர்கள் நம்மை 

மனமார வாழ்த்துவார்கள்அந்த வாழ்த்துஅந்த ஆசீர்வாதம் நம் 

தலைமுறையையும் அடுத்து வரும் தலைமுறைகளையும் 

பாதுகாக்கும். ஆனால் இன்றைய நடைமுறையில் பெரும்பாலும் பித்ரு கடமைகள் அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி ஒரு சடங்காக பாவிக்கப்பட்டு 

செய்யப்படுகிறதுஇந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் 

கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக பித்ரு தோஷ நிவர்த்தி அமையாதா 

என்கிற கோணத்தில் மட்டுமே இந்த கடமைகள் செய்யப்படுகின்றனஇந்த கண்ணோட்டம் மாற வேண்டும்பித்ருக்களுக்கு நாம் ஏன் 

செய்யவேண்டும்என்பதை நாம் உணர்ந்து செய்ய வேண்டும்அதை நம் குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் புரியவைக்க 

வேண்டும்அவ்வாறு செய்யும் பொழுதுநாம் இந்த உடலை விட்டு 

நீங்கும் பொழுதுநாம் பித்ருக்களாக மாறும்பொழுதுநமக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆத்மார்த்தமாக செய்யப்படும்இந்த 

வாழ்க்கையில் அனைத்தும் சுழற்சியேநாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு திரும்பி வருகிறதுஎனவே நாம் முதலில் இதை 

உணர்ந்து நாம் செய்யும் பூஜைகள் ஆக இருந்தாலும் சரிநம்முடைய கடமைகளாக இருந்தாலும் சரிமற்றவர்களுக்கு செய்யும் 

உதவிகள் ஆக இருந்தாலும் சரிநம்முடைய பித்ருக்களுக்கு 

செய்யும் கடமைகளாக இருந்தாலும் சரி அனைத்தையும் 

ஆத்மார்த்தமாக செய்தல் வேண்டும்அதாவது சுயநலமின்றி 

செய்தல்வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நாம் சுயநலமின்றி  

ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் பொழுது அது நமக்கு 

அடிப்படையான சில விஷயங்களை உணர்த்துகிறதுஉணர்ந்த 

அந்த விஷயங்கள் நம் வாழ்க்கையின் பாதையை மாற்றியமைத்து

நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறதுமோட்ச தீபம் என்பது பித்ருக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களின் கஷ்டங்களில் 

இருந்து விடுபட உதவுகிறதுநம்முடைய முன்னோர்களின் 

ஆன்மாவிற்கு உதவும் என்கிற நோக்கத்துடன் ஆத்மார்த்தமாக 

மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி தெரிந்துகொண்டு நாம் ஏற்றும் 

பொழுது நம் வாழ்வின் துன்பங்களும் விலக வாய்ப்புள்ளது

பித்ருக்களுக்கு செய்வது குறித்து நாம் அனைவரும் நம் 

குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம். அப்பொழுதுதான் நம் காலத்திற்கு பிறகு நம் ஆன்மாவிற்கு உய்வு கிடைக்கும்.


மோட்ச தீபம் ஏற்றுவதற்கான வழிமுறை:


21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஒருவர் இறந்துவிட்டாலோஅல்லது மருத்துவ துறையில் 

இருப்பவர்கள்கண்டிப்பாக "மோக்ஷ தீபம்கோவிலில் ஏற்ற 

வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.


பலரும் அது சம்பந்தமாக விசாரிக்கதேடியும் கிடைக்கவில்லை

சமீபத்தில்நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுதுஅதற்கான 

பதில் கிடைத்தது. "சித்தன் அருளைவாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.


தேவையானவை:-

*******************


வாழை இலை

பச்சை கற்பூரம்

சீரகம்

பருத்திக் கொட்டை

கல் உப்பு

மிளகு

நவ தான்யங்கள்

கோதுமை

நெல் (அவிக்காதது)

முழு துவரை

முழு பச்சை பயிறு

கொண்ட கடலை

மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)

முழு வெள்ளை மொச்சை

கருப்பு எள்

முழு கொள்ளு

முழு கருப்பு உளுந்து

விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42

தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21


செய்யும் முறை:-

*******************


எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்படபூ 

தவிரநல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.


துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய 

வைக்க வேண்டும்தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணிஎல்லா விளக்குகளையும் நன்றாக கழுவிநல்ல வெயிலில் காய வைக்க 

வேண்டும்.


மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்எந்த ஆலயத்தில் 

தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி 

அனுமதி பெற வேண்டும்.


எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம்முடிந்த வரை 

ஈசானிய மூலையில் (வடகிழக்குநன்கு உயர்ந்த இடத்தில் 

ஏற்றுவது சிறப்புமுதிலில் திரி தயாரிக்க வேண்டும்நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம்கருப்பு எள்சீரகம்பருத்தி 

கோட்டைகல் உப்புமிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் 

கொள்ள வேண்டும்.


இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் 

போகிறது.


ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில்தலை 

வாழை இலையினை வைக்க வேண்டும்அதன் மேல்

 நவதானியங்களை பரப்ப வேண்டும்.


பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் 

நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும்ஒரு 

விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும்.


நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும்பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும்சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.


தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம்

 போல் காட்சி கிடைக்கும்பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).


இறுதியாக இறைவனிடம் "இறைவாஇப்பூவுலகில் பிறந்துஇறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை 

சமர்ப்பிக்கிறோம்இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி

சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.


மேலும் இந்த பூசையை செய்வதும்செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமேநாங்கள் வெறும் கருவிகளேஎன்று பிரார்த்தனை செய்ய வேண்டும்வேண்டுமானால்உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.

மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்படஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் 

சேர்த்து விட வேண்டும்.


இது கட்டாயம்.

****************


ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் 

ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார்

அதனால்கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும்.



மோட்ச தீபம் குறித்து சில உபயோகமான பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

https://tut-temple.blogspot.com/search/label/மோட்ச%20தீப%20வழிபாடு


நோக்கிய தீபம் நம் முன்னோர்களுக்கு நாம் ஏற்ற வேண்டும் என்று நினைத்தாலும் கூட அது எல்லோராலும் ஏற்று இயலாது என்று சொல்லப்படுகிறது அதற்கான நேரம் வரும் பொழுது மட்டுமே நம்மால் ஏற்ற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Comments

  1. கடவுள் அந்த நிலையை தக்க சூழ்நிலையை தருவார் என்று நம்புவோம்
    ஓம் நமசிவாய

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...