ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் பித்ரு தர்ப்பணம், பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை குறித்து ஒரு பதிவு பார்த்தோம். அதைத்தொடர்ந்து மோட்சதீபம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவு, எனது குரு சாய் அவர்களினால்
உணர்த்தப்பட்ட ஒரு பதிவு. பித்ருக்களுக்கு செய்யும் கடமைகள்
அல்லது பித்ரு தோஷம் குறித்து செய்யப்படும் பரிகாரங்கள்
அனைத்தும் செய்பவருக்கு நல்லது நடக்கும் என்கிற ஒரு
கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. அதாவது
சுயநலத்தோடு செய்யப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பித்ரு கடமைகள் செய்யும் பொழுது அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி
செய்யப்படும் பொழுது அதனுடைய முழு பலன்கள் செய்பவருக்கு
சென்றடைவதில்லை. பித்ரு கடமை அல்லது பித்ருதோஷம்
நிவர்த்திகள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் நம்முடைய
முன்னோர்களின் ஆன்மாக்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால்
அதிலிருந்து அவர்களுக்கு விடுபட நாம் செய்யும் பித்ரு தர்ப்பணம்,
சிரார்த்தம் அல்லது தெவசம் மற்றும் மோட்சதீபம் போன்றவை உதவிசெய்யும். அவ்வாறு நாம் உதவி செய்யும் பொழுது, அந்த
ஆன்மாக்கள் தங்கள் படுகின்ற கஷ்டங்களில் இருந்து
துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் பொழுது, அவர்கள் நம்மை
மனமார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து, அந்த ஆசீர்வாதம் நம்
தலைமுறையையும் அடுத்து வரும் தலைமுறைகளையும்
பாதுகாக்கும். ஆனால் இன்றைய நடைமுறையில் பெரும்பாலும் பித்ரு கடமைகள் அல்லது பித்ரு தோஷ நிவர்த்தி ஒரு சடங்காக பாவிக்கப்பட்டு
செய்யப்படுகிறது. இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும்
கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக பித்ரு தோஷ நிவர்த்தி அமையாதா
என்கிற கோணத்தில் மட்டுமே இந்த கடமைகள் செய்யப்படுகின்றன. இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். பித்ருக்களுக்கு நாம் ஏன்
செய்யவேண்டும்? என்பதை நாம் உணர்ந்து செய்ய வேண்டும். அதை நம் குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் புரியவைக்க
வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது, நாம் இந்த உடலை விட்டு
நீங்கும் பொழுது, நாம் பித்ருக்களாக மாறும்பொழுது, நமக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆத்மார்த்தமாக செய்யப்படும். இந்த
வாழ்க்கையில் அனைத்தும் சுழற்சியே! நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு திரும்பி வருகிறது! எனவே நாம் முதலில் இதை
உணர்ந்து நாம் செய்யும் பூஜைகள் ஆக இருந்தாலும் சரி, நம்முடைய கடமைகளாக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்கு செய்யும்
உதவிகள் ஆக இருந்தாலும் சரி, நம்முடைய பித்ருக்களுக்கு
செய்யும் கடமைகளாக இருந்தாலும் சரி அனைத்தையும்
ஆத்மார்த்தமாக செய்தல் வேண்டும். அதாவது சுயநலமின்றி
செய்தல்வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நாம் சுயநலமின்றி
ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் பொழுது அது நமக்கு
அடிப்படையான சில விஷயங்களை உணர்த்துகிறது. உணர்ந்த
அந்த விஷயங்கள் நம் வாழ்க்கையின் பாதையை மாற்றியமைத்து,
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது. மோட்ச தீபம் என்பது பித்ருக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களின் கஷ்டங்களில்
இருந்து விடுபட உதவுகிறது. நம்முடைய முன்னோர்களின்
ஆன்மாவிற்கு உதவும் என்கிற நோக்கத்துடன் ஆத்மார்த்தமாக
மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி தெரிந்துகொண்டு நாம் ஏற்றும்
பொழுது நம் வாழ்வின் துன்பங்களும் விலக வாய்ப்புள்ளது.
பித்ருக்களுக்கு செய்வது குறித்து நாம் அனைவரும் நம்
குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம். அப்பொழுதுதான் நம் காலத்திற்கு பிறகு நம் ஆன்மாவிற்கு உய்வு கிடைக்கும்.
மோட்ச தீபம் ஏற்றுவதற்கான வழிமுறை:
21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற
வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.
பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை.
சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான
பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.
தேவையானவை:-
*******************
வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21
செய்யும் முறை:-
*******************
எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ
தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய
வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க
வேண்டும்.
மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில்
தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி
அனுமதி பெற வேண்டும்.
எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை
ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில்
ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி
கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக்
கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப்
போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை
வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல்
நவதானியங்களை பரப்ப வேண்டும்.
பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள்
நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு
விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும்.
நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம்
போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).
இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை
சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி,
சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.
மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில்
சேர்த்து விட வேண்டும்.
இது கட்டாயம்.
****************
ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும்
ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார்.
அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும்.
மோட்ச தீபம் குறித்து சில உபயோகமான பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
https://tut-temple.blogspot.com/search/label/மோட்ச%20தீப%20வழிபாடு
நோக்கிய தீபம் நம் முன்னோர்களுக்கு நாம் ஏற்ற வேண்டும் என்று நினைத்தாலும் கூட அது எல்லோராலும் ஏற்று இயலாது என்று சொல்லப்படுகிறது அதற்கான நேரம் வரும் பொழுது மட்டுமே நம்மால் ஏற்ற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
கடவுள் அந்த நிலையை தக்க சூழ்நிலையை தருவார் என்று நம்புவோம்
ReplyDeleteஓம் நமசிவாய