Skip to main content

Posts

Showing posts from April, 2020

சுந்தரருக்கு மனைவியிடம் ஏற்பட்ட பிணக்கை தீர்க்க ஆதிசைவராக வந்த சிவன்!

பரவையர் ஊடலைத் தீர்க்க  ஆதிசைவராக வந்த இறைவன்! தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளம், மிக்க நன்றிகள்!   சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர். இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...

சதுரகிரி மலை தல வரலாறு

சதுரகிரி மலை     சதுரகிரி   தல   வரலாறு   :     சதுரகிரி   மலை   அடிவாரத்திலுள்ள   கோட்டையூரில்   பிறந்தவன்   பச்சைமால் .   இவன்   பசுக்களை   மேய்த்து  பிழைத்தான் .   இவனது   பெற்றோர்   தில்லைக்கோன் -   திலகமதி .   மனைவி   சடைமங்கை .   இவள்   மாமனார்      வீட்டில்   பாலைக்   கொடுத்து   விட்டு   வருவாள் .   ஒருமுறை ,   பால்   கொண்டு   சென்ற   போது   எதிரில்   வந்த துறவி   அவளிடம்   குடிக்க   பால்   கேட்டார் .   சடைமங்கையும்   கொடுக்கவே ,   தினமும்   தனக்கு   பால்   தரும்படி  கேட்டார் .   சடைமங்கையும்   ஒப்புக்கொண்டாள் . வழக்கத்தை   விட   சற்று   பால்   குறைவதைக்   கவனித்த   சடைமங்கையின்   மாமனார் ,   இதுபற்றி   மகன் பச்சைமாலுக்கு   தெரிவித்து...