Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 3 (வரிகள் 56- 59)


பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்

பூ - பிறவி, வலம் - மலம், ஆணவம்,  பொலிந்தினி - (பொலி + இந்து + இனி) பொலி - மொத்த விளைவு , இந்து - கரி, இனி - உடனடியாக, கணத்தில், தண்ணீர்- அலைக்கழித்து, ஏமாற்று, பந்தர் - முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாத பாசத்திற்கு உள்ளானவர்கள்,
 சயம் - சிதைத்து, பெற - தக்க காலத்தில், வைத்து - காரணமான, நன்னீர் - நல்ல, 
சேவகனாய் - ஊழியஞ் செய்பவனாய், நன்மை - நல்லருள், கடவுள்

பிறவி ஆணவம் போன்றவற்றின் மொத்த விளைவுகளை, ஒருகணத்தில் கரியாக்கி அருளி, பாவத்தை அழித்த பேறும், முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாது பாசத்திற்கு உள்ளானவர்கள் அலைகழிய காரணமானவற்றை தக்க காலத்தில் சிதைத்து,  நல்ல ஊழியஞ் செய்பவனாய் நல்லருள் செய்தவன் இறைவன் என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

குறிப்பு: மேற்கண்ட நான்கு வரிகள் குறித்து பல விளக்கங்கள் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையான விளக்கங்கள், பூவலம் என்பது ஒரு திருத்தலம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  அதுபோல தண்ணீர், நன்னீர், சேவகன் என்பது பாண்டியனை குறிப்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். மேற்கண்ட இரண்டு விளக்கங்களும் தமிழ் அகராதியை உபயோகப்படுத்தாமல் மாணிக்கவாசகர் உபயோகப்படுத்திய வார்த்தைகளுக்கு புழக்கத்திலுள்ள, தெரிந்த அர்த்தங்களை உபயோகப்படுத்தியுள்ளனர். திருமறைகளில் உள்ள பாடல்களின் இனிமை அந்தப் பொருட்கள் அதனுடைய அர்த்தங்கள் மறைபொருளாய் இருப்பதுதான். அதை தமிழ் அகராதியை கொண்டு சரிவர புரிந்து கொள்வது திருவாசகத்தை மட்டுமல்ல இறைவனின் தன்மையை புரிந்து கொள்வதாக அமையும் ஏனெனில் இறைவனும் மறைபொருளாக நம் உள்ளத்தில் இருக்கிறான்.

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...