Skip to main content

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 3 (வரிகள் 56- 59)


பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்

பூ - பிறவி, வலம் - மலம், ஆணவம்,  பொலிந்தினி - (பொலி + இந்து + இனி) பொலி - மொத்த விளைவு , இந்து - கரி, இனி - உடனடியாக, கணத்தில், தண்ணீர்- அலைக்கழித்து, ஏமாற்று, பந்தர் - முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாத பாசத்திற்கு உள்ளானவர்கள்,
 சயம் - சிதைத்து, பெற - தக்க காலத்தில், வைத்து - காரணமான, நன்னீர் - நல்ல, 
சேவகனாய் - ஊழியஞ் செய்பவனாய், நன்மை - நல்லருள், கடவுள்

பிறவி ஆணவம் போன்றவற்றின் மொத்த விளைவுகளை, ஒருகணத்தில் கரியாக்கி அருளி, பாவத்தை அழித்த பேறும், முற்பிறப்பில் செய்த தீவினையால் ஞானம் பெறாது பாசத்திற்கு உள்ளானவர்கள் அலைகழிய காரணமானவற்றை தக்க காலத்தில் சிதைத்து,  நல்ல ஊழியஞ் செய்பவனாய் நல்லருள் செய்தவன் இறைவன் என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

குறிப்பு: மேற்கண்ட நான்கு வரிகள் குறித்து பல விளக்கங்கள் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையான விளக்கங்கள், பூவலம் என்பது ஒரு திருத்தலம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  அதுபோல தண்ணீர், நன்னீர், சேவகன் என்பது பாண்டியனை குறிப்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். மேற்கண்ட இரண்டு விளக்கங்களும் தமிழ் அகராதியை உபயோகப்படுத்தாமல் மாணிக்கவாசகர் உபயோகப்படுத்திய வார்த்தைகளுக்கு புழக்கத்திலுள்ள, தெரிந்த அர்த்தங்களை உபயோகப்படுத்தியுள்ளனர். திருமறைகளில் உள்ள பாடல்களின் இனிமை அந்தப் பொருட்கள் அதனுடைய அர்த்தங்கள் மறைபொருளாய் இருப்பதுதான். அதை தமிழ் அகராதியை கொண்டு சரிவர புரிந்து கொள்வது திருவாசகத்தை மட்டுமல்ல இறைவனின் தன்மையை புரிந்து கொள்வதாக அமையும் ஏனெனில் இறைவனும் மறைபொருளாக நம் உள்ளத்தில் இருக்கிறான்.

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...