Skip to main content

சிவபுராணம் வரிகள் 17-20 விளக்கம்


சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

*சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்*
சிந்தை என்றால் மனம், எண்ணம் என்று பொருள். நின்று என்றால் எப்பொழுதும் என்று பொருள். சிவன் என் மனதினுள் எப்பொழுதும் இருக்கிறான் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர். அவ்வாறு இருப்பதை உணர்ந்ததினால்,

*அவன் அருளாலே அவன் தாள் வணங்கி*
அருள் என்றால்  கூறுதல், இயற்றுதல் என்று பொருள். அதாவது சிவன் என்னுடைய மனதில் இருந்து கொண்டு என்னைச் சொல்ல சொன்னதினால், அவன் தாள் வணங்கி, அவனுடைய திருவடிகளை முதலில் வணங்கி, 

*சிந்தை மகிழச்*
மாணிக்கவாசகர் சிந்தையில் இருப்பது சிவன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார் எனவே சிந்தை மகிழ என்றால் சிவன் மகிழ என்று பொருள்.
*சிவபுராணம் தன்னை*
சிவபுராணம் என்றால் இந்தப் பாடலை, தன்னை என்றால் இறைவன் மற்றும் அம்மா என்று பொருள். இந்தப் பாடலாக அதாவது சிவபுராணமாக, திருவாசகமாக இருக்கும் இறைவனை, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நம் அனைவருக்கும், இந்த உலகத்துக்கே தாயாக இருக்கும் இறைவனை அவன் சிந்தை மகிழ

*முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்*
உரைப்பது என்றால் சொல்வது. ஒய என்றால் அழிதல் என்று பொருள் . சிவபுராணமாக, திருவாசகமாக இருக்கும் இறைவனை, திருவாசகத்தை படிப்பதன் மூலமாக, சிவபுராணத்தை படிப்பதன் மூலமாக இறைவனை நினைக்கிறோம். அப்படி நினைப்பதன் மூலம், படிப்பதன் மூலம்,
சிவன் மகிழ சொல்வதன் மூலம், என் முந்தைய அனைத்து பிறவிகளின் வினைகளும்  அழிகின்றன என்று சொல்கிறார் மாணிக்கவாசகர். அதாவது நம்முடைய வினைகள் அழிய வேண்டுமானால், சிவபுராணம் படிப்பதற்கு முன்பு, நம் ஆன்மாவாக இருப்பது நம்முடைய இறைவன் சிவன் என்பதை உணர்ந்து, இந்தப்பாடல் ஆகவே இருப்பதை சிவன் என உணர்ந்து, பிறகு சிவபுராணத்தை பாராயணம் செய்தோம் என்றால் நம்முடைய முந்தைய பிறவி வினைகள் அனைத்தும் அழியும். இதைத்தான் மாணிக்கவாசகர் பின்வரும் வரிகளில்சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்என்று சொல்லியிருக்கிறார். திருவாசகம் ஆகவே இருப்பது சிவன் என்பதை உணர்ந்து விட்டால், பிறகு வரிகளுக்கு பொருள் புரிகிறதோ இல்லையோ அதை பற்றிய கவலை வேண்டாம். நாம், எப்பொழுது ஒருவர் பெருமைகளைப் பற்றி சொல்வோம் என்றால், அவர்களுடைய செயல் உயர்ந்தது, உன்னதமானது என்று நமக்கு தோன்றும் பொழுது, மற்றவர் பெருமைகளை பேசுவோம். இல்லை எனில் நம்முடைய பெருமைகளை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருப்போம். திருவாசகத்தை படிப்பதன் மூலம், இறைவன் உயர்ந்தவன், அனைத்திலும் பெரியவன் என்பதை உணர்ந்து நாம் படிப்பதன் மூலம் நம்முடைய ஆணவம், அகங்காரம் போன்றவை மறைய தொடங்கும். இறைவனை உணர்வதற்காக இந்த சிவபுராண பாராயணத்தை ஒரு அடியவர் மூலம் அண்ணாமலையார் நமக்கு ஆரம்பித்து கொடுத்திருக்கிறார். இறைவனாகவே இருக்கும் இந்த சிவபுராணத்தை, நம்மை எல்லாம் இணைத்து  பாராயணம் செய்யும் பாக்கியத்தை கொடுத்த இறைவனை, அதுமட்டுமில்லாமல் சிவபுராணத்திற்கு விளக்கம் காணவும் வைத்து, உணரவைத்த இறைவன் திருவடிகளைப் பணிந்து, வணங்கி, போற்றி துதிப்போம்.


தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்.  *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...