Skip to main content

சிவபுராணம் வரிகள் 21 - 25 விளக்கம்


*கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி*
நுதல் என்றால் நெற்றி என்று பொருள். கண் நுதலான் என்றால் நெற்றியிலே  கண்ணுடைய பெருமான் என்று பொருள். எய்தி என்றால் அணுகுதல் என்று பொருள். கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி என்றால்  நெற்றியிலே கண்ணுடைய பெருமான் தன் கருணையை காட்ட என்னை அணுகியபோது என்று அர்த்தம்.

*எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி*
எண்ணுதல் என்றால் மதிப்பிடுதல், எட்டா என்றால் இயலாத, எழில் என்றால் தோற்றப்பொலிவு, ஆர் என்றால் அழகு மற்றும் அரிய என்று பொருள். கழல் என்றால் பாதம் திருவடி என்று பொருள், இறைஞ்சி என்றால் மரவுரி என்று பொருள். எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி என்றால் மரவுரி அணிந்த, அழகான, அரிய பாதங்களை உடையவன், என்னால் மதிப்பிடவே முடியாத  தோற்றப்பொலிவு  உடையவன்  என்று பொருள்.

*விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்*
விண் நிறைந்தும் என்றால் விண்ணுலகம் முழுவதும் என்று பொருள், மண் என்றால் நிலவுலகம், மிக்காய் என்றால் நிலவுலகம் விண்ணுலகம் தாண்டி மீதி என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் என்று பொருள், விளங்கு என்றால்  பளபளப்பாக  ஒளிர்தல் என்று பொருள். அதாவது விண்ணுலகும் நிறைந்து, நிலவுலகம் நிறைந்து அவை மட்டுமில்லாமல் மீதம் என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த எல்லா இடங்களிலும் ஒளியாய் நிறைந்து  என்று வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். மேலும் அந்த ஒளி வெறும் ஒளி அல்ல, பளபளப்பாக, மின்னுகின்ற ஒளி என்று அந்த ஒளியை மாணிக்கவாசகர் மேலும் வர்ணிக்கிறார். விண்ணும் மண்ணும் எல்லா இடங்களிலும் நிறைந்த பரம்பொருளை அந்த ஒளியை நம் மனக்கண்ணில் இந்த வரிகளைப் படிக்கும்போது நினைத்துப் பார்ப்போம். 

*எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்*
எண் என்றால் மனம் ,  இறந்து - அழிந்து பெரும் என்றால் மகத்தான, சீர் என்றால் மதிப்பு, இயல்பு என்ற பொருள். அதாவது மனம் அழிந்து, வரையறுக்கவே முடியாத, கற்பனைக் கெட்டாத, இறைவனின் மகத்தான  இயல்பை என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்.

*பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்*
பொல்லா என்றால் தீய, கடுமையான என்று பொருள். புகழுமா றொன்றறியேன், இந்த வார்த்தையை அழிந்த புகழ் + மாறு (மாற்று) +அறியேன் என்று பிரிக்க வேண்டும். மாற்று என்றால் ஒப்புமை, உவமை என்று பொருள். அதாவது மாணிக்கவாசகர் தன்னை, தீய ,கடுமையான வினைகளை உடையவன் என்று சொல்லி அப்படிப்பட்ட எனக்கு இறைவனை புகழ்வதற்கான இணையான உவமை சொல்ல  எதுவும் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். இறைவனின் புகழுக்கு உவமை சொல்ல வேறு எதுவும் இந்த உலகில் கிடையாது என்றும் பொருள் கொள்ளலாம்.

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்.  *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...