Skip to main content

சிவபுராணம் வரிகள் 21 - 25 விளக்கம்


*கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி*
நுதல் என்றால் நெற்றி என்று பொருள். கண் நுதலான் என்றால் நெற்றியிலே  கண்ணுடைய பெருமான் என்று பொருள். எய்தி என்றால் அணுகுதல் என்று பொருள். கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி என்றால்  நெற்றியிலே கண்ணுடைய பெருமான் தன் கருணையை காட்ட என்னை அணுகியபோது என்று அர்த்தம்.

*எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி*
எண்ணுதல் என்றால் மதிப்பிடுதல், எட்டா என்றால் இயலாத, எழில் என்றால் தோற்றப்பொலிவு, ஆர் என்றால் அழகு மற்றும் அரிய என்று பொருள். கழல் என்றால் பாதம் திருவடி என்று பொருள், இறைஞ்சி என்றால் மரவுரி என்று பொருள். எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி என்றால் மரவுரி அணிந்த, அழகான, அரிய பாதங்களை உடையவன், என்னால் மதிப்பிடவே முடியாத  தோற்றப்பொலிவு  உடையவன்  என்று பொருள்.

*விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்*
விண் நிறைந்தும் என்றால் விண்ணுலகம் முழுவதும் என்று பொருள், மண் என்றால் நிலவுலகம், மிக்காய் என்றால் நிலவுலகம் விண்ணுலகம் தாண்டி மீதி என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் என்று பொருள், விளங்கு என்றால்  பளபளப்பாக  ஒளிர்தல் என்று பொருள். அதாவது விண்ணுலகும் நிறைந்து, நிலவுலகம் நிறைந்து அவை மட்டுமில்லாமல் மீதம் என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த எல்லா இடங்களிலும் ஒளியாய் நிறைந்து  என்று வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். மேலும் அந்த ஒளி வெறும் ஒளி அல்ல, பளபளப்பாக, மின்னுகின்ற ஒளி என்று அந்த ஒளியை மாணிக்கவாசகர் மேலும் வர்ணிக்கிறார். விண்ணும் மண்ணும் எல்லா இடங்களிலும் நிறைந்த பரம்பொருளை அந்த ஒளியை நம் மனக்கண்ணில் இந்த வரிகளைப் படிக்கும்போது நினைத்துப் பார்ப்போம். 

*எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்*
எண் என்றால் மனம் ,  இறந்து - அழிந்து பெரும் என்றால் மகத்தான, சீர் என்றால் மதிப்பு, இயல்பு என்ற பொருள். அதாவது மனம் அழிந்து, வரையறுக்கவே முடியாத, கற்பனைக் கெட்டாத, இறைவனின் மகத்தான  இயல்பை என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்.

*பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்*
பொல்லா என்றால் தீய, கடுமையான என்று பொருள். புகழுமா றொன்றறியேன், இந்த வார்த்தையை அழிந்த புகழ் + மாறு (மாற்று) +அறியேன் என்று பிரிக்க வேண்டும். மாற்று என்றால் ஒப்புமை, உவமை என்று பொருள். அதாவது மாணிக்கவாசகர் தன்னை, தீய ,கடுமையான வினைகளை உடையவன் என்று சொல்லி அப்படிப்பட்ட எனக்கு இறைவனை புகழ்வதற்கான இணையான உவமை சொல்ல  எதுவும் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். இறைவனின் புகழுக்கு உவமை சொல்ல வேறு எதுவும் இந்த உலகில் கிடையாது என்றும் பொருள் கொள்ளலாம்.

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்.  *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...