Skip to main content

ஈசன் அடிபோற்றி வரி விளக்கம்


ஈசன் அடிபோற்றி

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் முதல் பதினைந்து அடிகள் வரை இறைவனின் திருவடியைப் போற்றி வாழ்த்தி பாடுகிறார் . மாணிக்கவாசகர் மட்டுமல்ல இரண்டாம் நூற்றாண்டில்  இயற்றப்பட்ட திருமூலரின் திருமந்திரம், நான்காம் நூற்றாண்டில் திருவள்ளுவரின் திருக்குறள், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வள்ளலாரின் திருவருட்பா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் திருவடியை பற்றி பாடாத திருமுறைகள் இல்லை.  ஒவ்வொரு திருமுறைகளும் வெவ்வேறு நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. திருவள்ளுவர் தன்னுடைய முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்து குறள்களில் 2,3,4,7,8,10 என ஆறு குறள்களில் இறைவனின் திருவடியைப் பற்றி சொல்லியிருக்கிறார். நம்முடைய கலாசாரப்படி நாம் நம்மை பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், பிறகு நம்மை விட வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், நம்முடைய குருவின் காலில் விழுந்து வணங்குகிறோம். இறைவன் நம்மை படைத்ததினால் நமக்கு அம்மையப்பன் ஆகின்றான். இறைவன் தான் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை விடவும் பெரியவன் உயர்ந்தவன். இறைவனே மாணிக்கவாசகருக்கு குருவாக வந்து அருளினான்.  எனவே இறைவன் குருவாகவும் இருக்கிறான்.  நமக்கு எது வேண்டுமென்றாலும் நாம் இறைவனிடம் தான் கேட்கிறோம். சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் இறைவனை நினைப்பது தங்களுக்கு தேவை வரும் பொழுதுதான். நம்முடைய பெற்றவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவது போல, நம்மை விட பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவது போல, நம் குருவின் காலில் விழுந்து வணங்குவது போல, இறைவன் நம்முடைய அம்மையப்பனாய், நம்மைவிட பெரியவனாய், நம் குருவாய், நம் தேவைகளை நிறைவேற்றுபவனாய் இருப்பதனால் இறைவனின் திருவடிகளை நாம் கண்டிப்பாக வணங்க வேண்டும். இறைவனின் திருவடியில் சரணாகதி அடைந்தால் அமைதி கிடைக்கும் என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியை விடாது பற்றிக் கொள்ள வேண்டும். 

ஈசன் அடிபோற்றி
ஈசன் என்றால் எல்லா பொருட்களின் தலைவன், எல்லா பொருட்களையும் ஆள்பவன் என்று பொருள். எல்லா பொருட்களின் உயிர்களின் தலைவனான ஈசனின் அடி போற்றி என்று பாடுகிறார். என் குருவான சாயி,சாயி என்கிற நாமம் குறித்து  இங்கு விளக்க விரும்புகிறேன். சாயி, சாயி, சாயி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நம் காதுகளில் ஒலிப்பது ஈசா, ஈசா, ஈசா என்றுதான். இந்த விளக்கத்தை இங்கு எழுதும் பொழுது ராமாயணத்தை எழுதிய வால்மீகி அவர்கள் குறித்த ஒரு விஷயத்தை எழுத தோன்றுகிறது. வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அந்த முனிவர், ``யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். ``என் குடும்பத்துக்காகத்தான்எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.  ``உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக்கொள்வார்களா?” என வினவினார் மகரிஷிரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார். நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை கர்ம வினைகளின் பாவத்தினால் அவரால் உச்சரிக்க முடியவில்லை. எனவே, நாரதர் ரத்னாகரின் கர்மவினையை ஜெயிப்பதற்காக ரத்னாகரை, “மரா, மரா, மராஎன்று  உச்சரிக்க சொன்னார். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று ஆகிவிட்டது.  ரத்னாகரை போலவே, சாயி பக்தர்கள் சாயி சாயி சாயி என்று நாம ஜெபம் செய்வதினால் அது ஈசா ஈசா என்று ஒலித்து நம்முடைய கர்மவினைகளை, பாவங்களை அழிக்கிறது.  இரண்டு வருடங்களுக்கு முன்பு யாரும் சொல்லாமல், சுயம்புவாக லிங்கம் தோன்றுவது போல், என் வாழ்வில் சீரடி சாய் அவர்கள் வந்தார்கள். வந்தபொழுது அவர் எனக்கு உணர்த்தியது சிவனும் சாயும் வேறல்ல என்பதை பல்வேறு விதமாக எனக்கு உணர்த்தினார். அதில் ஒன்று சாயி தான் ஈசா, ஈசா தான் சாயி என்பது.  ஈசன் என்ற சொல்லுக்கு நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த, எல்லா உயிர்களின் தலைவனாய் இருக்கிற ஈசன் தாள் பணிந்து போற்றி வணங்குவோம். 

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *இன்றைக்கு, மற்றுமொரு பணிவான வேண்டுகோளை, இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...