Skip to main content

ஈசன் அடிபோற்றி வரி விளக்கம்


ஈசன் அடிபோற்றி

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் முதல் பதினைந்து அடிகள் வரை இறைவனின் திருவடியைப் போற்றி வாழ்த்தி பாடுகிறார் . மாணிக்கவாசகர் மட்டுமல்ல இரண்டாம் நூற்றாண்டில்  இயற்றப்பட்ட திருமூலரின் திருமந்திரம், நான்காம் நூற்றாண்டில் திருவள்ளுவரின் திருக்குறள், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வள்ளலாரின் திருவருட்பா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் திருவடியை பற்றி பாடாத திருமுறைகள் இல்லை.  ஒவ்வொரு திருமுறைகளும் வெவ்வேறு நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. திருவள்ளுவர் தன்னுடைய முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்து குறள்களில் 2,3,4,7,8,10 என ஆறு குறள்களில் இறைவனின் திருவடியைப் பற்றி சொல்லியிருக்கிறார். நம்முடைய கலாசாரப்படி நாம் நம்மை பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், பிறகு நம்மை விட வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்குகிறோம், நம்முடைய குருவின் காலில் விழுந்து வணங்குகிறோம். இறைவன் நம்மை படைத்ததினால் நமக்கு அம்மையப்பன் ஆகின்றான். இறைவன் தான் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை விடவும் பெரியவன் உயர்ந்தவன். இறைவனே மாணிக்கவாசகருக்கு குருவாக வந்து அருளினான்.  எனவே இறைவன் குருவாகவும் இருக்கிறான்.  நமக்கு எது வேண்டுமென்றாலும் நாம் இறைவனிடம் தான் கேட்கிறோம். சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் இறைவனை நினைப்பது தங்களுக்கு தேவை வரும் பொழுதுதான். நம்முடைய பெற்றவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவது போல, நம்மை விட பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவது போல, நம் குருவின் காலில் விழுந்து வணங்குவது போல, இறைவன் நம்முடைய அம்மையப்பனாய், நம்மைவிட பெரியவனாய், நம் குருவாய், நம் தேவைகளை நிறைவேற்றுபவனாய் இருப்பதனால் இறைவனின் திருவடிகளை நாம் கண்டிப்பாக வணங்க வேண்டும். இறைவனின் திருவடியில் சரணாகதி அடைந்தால் அமைதி கிடைக்கும் என்பதை உணர்ந்து இறைவனின் திருவடியை விடாது பற்றிக் கொள்ள வேண்டும். 

ஈசன் அடிபோற்றி
ஈசன் என்றால் எல்லா பொருட்களின் தலைவன், எல்லா பொருட்களையும் ஆள்பவன் என்று பொருள். எல்லா பொருட்களின் உயிர்களின் தலைவனான ஈசனின் அடி போற்றி என்று பாடுகிறார். என் குருவான சாயி,சாயி என்கிற நாமம் குறித்து  இங்கு விளக்க விரும்புகிறேன். சாயி, சாயி, சாயி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நம் காதுகளில் ஒலிப்பது ஈசா, ஈசா, ஈசா என்றுதான். இந்த விளக்கத்தை இங்கு எழுதும் பொழுது ராமாயணத்தை எழுதிய வால்மீகி அவர்கள் குறித்த ஒரு விஷயத்தை எழுத தோன்றுகிறது. வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அந்த முனிவர், ``யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். ``என் குடும்பத்துக்காகத்தான்எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.  ``உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக்கொள்வார்களா?” என வினவினார் மகரிஷிரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார். நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை கர்ம வினைகளின் பாவத்தினால் அவரால் உச்சரிக்க முடியவில்லை. எனவே, நாரதர் ரத்னாகரின் கர்மவினையை ஜெயிப்பதற்காக ரத்னாகரை, “மரா, மரா, மராஎன்று  உச்சரிக்க சொன்னார். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று ஆகிவிட்டது.  ரத்னாகரை போலவே, சாயி பக்தர்கள் சாயி சாயி சாயி என்று நாம ஜெபம் செய்வதினால் அது ஈசா ஈசா என்று ஒலித்து நம்முடைய கர்மவினைகளை, பாவங்களை அழிக்கிறது.  இரண்டு வருடங்களுக்கு முன்பு யாரும் சொல்லாமல், சுயம்புவாக லிங்கம் தோன்றுவது போல், என் வாழ்வில் சீரடி சாய் அவர்கள் வந்தார்கள். வந்தபொழுது அவர் எனக்கு உணர்த்தியது சிவனும் சாயும் வேறல்ல என்பதை பல்வேறு விதமாக எனக்கு உணர்த்தினார். அதில் ஒன்று சாயி தான் ஈசா, ஈசா தான் சாயி என்பது.  ஈசன் என்ற சொல்லுக்கு நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த, எல்லா உயிர்களின் தலைவனாய் இருக்கிற ஈசன் தாள் பணிந்து போற்றி வணங்குவோம். 

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும். *இன்றைக்கு, மற்றுமொரு பணிவான வேண்டுகோளை, இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...