Skip to main content

கோகழி ஆண்ட குருமணி வரிக்கு விளக்கம்


 கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

கோ என்றால் இடபம், மாடு, பசு;  கழி என்றால் கயிறு; குருமணிதன் - ஆசாரியனுக்கு ஆசாரியன், குருவிற்கே குரு என்று பொருள்;  தன்  என்றால் திட்டவட்டமாக அதாவது தெளிவாக வரையறுக்கப்பட்ட என்று பொருள்.

இந்த வரியில் கோகழி என்பது நந்திதேவரை குறிக்கிறது. சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார்முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.  நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய எட்டு பேரும் பெற்று நந்தி பெருமானின் மாணவர்களானர். நந்திதேவர் மற்றவர்களுக்கு ஆதிகுருவாக இருந்தார். நந்திதேவருக்கு குருவாக, சிவன் இருந்தமையால் சிவன் ஆசாரியனுக்கு ஆசாரியன் ஆகிறார். அதையே இங்கு மாணிக்கவாசகர் குருமணி என்று சிவனை போற்றுகிறார். சிவன் ஆசாரியனுக்கு ஆசாரியன், அவரை தவிர வேறு யாரும் உயர்ந்தவர் இல்லை என்பதை குறிக்க தன் என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தி, திட்டவட்டமாக மாணிக்கவாசகர் சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம். 


இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம்.


முப்பொருள் என்பது சைவ சித்தாந்தத்தில் பதி, பசு ,பாசம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது தளைகளையும் குறிக்கிறது. தளைகளை இங்கு ஒரே வார்த்தையாக சொல்லப்போனால் மும்மலங்கள் என்று சொல்லலாம்.  தளை அல்லது இந்த மலங்கள் உயிர்களைப் பிணைத்திருக்கும் ஒரு கயிறு போல். இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்கிற வரியை பொருள் தெரிந்து கொள்ள முயல்வோம். பசுவாகிய உயிர்களை பாசம் என்கிற கயிறு பிணைத்திருக்கிறது. ஆண்ட என்றால் முறைப்படுத்துதல் என்கின்ற ஒரு பொருள் வரும். பாசம் (ஆணவம் போன்றவை) என்ற கயிற்றால் பிடித்திருக்கும் பசுவாகிய (உயிர்கள்) நம்மை முறைப்படுத்த குரு ஒருவரால் மட்டுமே முடியும். அதனால்தான் குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை என்று சொல்லி வைத்தார்கள். அந்த குருவிற்கும் குருவான இறைவன் தாள் வாழ்க என்று நாம் பொருள் கொள்ளலாம். நம் அனைவருக்குமே பக்குவப்பட்ட ஒரு நிலை வரும் பொழுது, கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார். நாம் குருவை தேடி செல்ல வேண்டியதில்லை. நாம் பக்குவப்பட்ட நிலை அடையும் பொழுது குரு நம்மை தேடி வருவார் மறுக்கமுடியாத ஒரு உண்மை. 

கோகழி என்றால் திருவாவடுதுறை என்றும் சொல்வார்கள்.  கழி' என்பது கடற்புறத்தின் துறை(உப்பங்கழி) என்று அழைக்கப்படும் 'கடல் துறைமுகம்' என்பது பொருள். அத்தகைய கடல் துறைமுகங்களில், மாபெரும் துறை என்பதைக் குறிக்கவே, 'கோ' என்னும் தலைமை (அல்லது) பெரிய (அல்லது) பெருமை என்ற பொருளில் பெருந்துறை(கோகழி) என்ற சொல்லாட்சி தரப்பட்டது  என்று பலர் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய பார்வையில் திருப்பெருந்துறை குறித்து தோன்றிய விளக்கத்தை பகிர்கிறேன். திருப்பெருந்துறையில் இறைவன் சிவன் மாணிக்கவாசகருக்கு அந்தணர் உருவத்தில் குருவாக வந்து அருளினார் என்று மாணிக்கவாசகர் வரலாறு கூறுகிறது.  புராணத்தில் இறைவன் சிவன் நந்திதேவருக்கு மட்டுமே குருவாக இருந்திருக்கிறார் என்று படிக்கிறோம். எனவே என்னுடைய பார்வையில் மாணிக்கவாசகர்  நந்திதேவர் அம்சமாக இருக்கலாம். கோகழி என்னும் திருப்பெருந்துறையில் நந்திதேவர் அம்சமான மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டதால், கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம். மாணிக்கவாசகர் நந்திதேவர் அம்சம் என்ற எண்ணம் என்னுள் தோன்றிய பின் அதை கூகுளில் தேடிப் பார்த்த பொழுது கீழ்க்கண்ட இணைய தளம் கிடைத்தது.  இந்த இணையதளத்தில்  எண் 4 பற்றி படிக்கவும்.

கோகழி என்றால் திருவாவடுதுறை என்று தமிழ் அகராதி கூறுகிறது. திருக்கைலாயத்தில், சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டுக் காஞ்சி நகரையடைந்தார். அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8000 வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக் கன்றின் வடிவில் இறைவனை நோக்கித் தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள் புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.
திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக் கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் என்பவன், அவனுடைய விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து, அவரது உடலினை நக்கி, முகர்ந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களின் களிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். பசுக்களை அதன் ஊரில் விட்டுவிட்டு, திருமூலர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார். இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர். நந்திதேவரின் மாணவரான திருமூலர், திருவாவடுதுறையில் திருமந்திரம் இயற்றினார். பசுக்களான உயிர்கள் மேல் கொண்ட கருணையினால் திருமந்திரம் உரைக்கப்பட்டது எனவும் கொள்ளலாம். நந்தி தேவரின் மாணவராக திருமூலருக்கு, திருவாவடுதுறையில் இறைவன் திருமூலர் உடலை மறைத்து அவரை ஆட்கொண்டு திருமந்திரம்  எழுத வைத்ததால் கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம்.

 இந்த வரிக்கு என்று நம்மை இணைந்து விளக்கம் காண வைத்த குருவிற்கு குருவான சிவனின் திருப்பாதங்களை பணிந்து வணங்குவோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...