Skip to main content

சிவபுராணம் வரிகள் 66 - 70 விளக்கம்

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே


மாசற்ற - கருமையற்றமங்காத  சோதி - ஒளிமலர்ந்த  தோன்றிய, 

மலர்ச்சுடரே - மலர் என்றால் மிகப் பிரகாசமானசுடர் என்றால் ஒளி,

தேசன் - ஒளிமயமாயுள்ளவன்பெரியோன்தேன் - தேன்ஆர்அமுதே - ஆர் என்றால் அரியஆர்அமுதம் என்றால் அரியஅமுதம், புரம் - நகரம்ஊர்பாசம் மும்மலம்ஆணவமலம்,  பற்று இல்வாழ்க்கைஅறுத்தல் - நீக்குதல்இல்லாமற் செய்தல், 

பாரி - கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல்ஆரியன் -கழைக்கூத்தன், 

 நேசம் - ஆர்வம்நெஞ்சம் - மனம்வஞ்சம் - மாயைகபடம்பொய் , 

கெடுத்தல் - நீக்குதல்காணாமற் போகுதல், பே - பெரும்ஆது - தோணிகட்டுமரம்பேராது என்றால் பெரிய மிதவைதெப்பம்கட்டுமரம் என்று பொருள் . பே என்ற என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்பேராசிரியர்ஆணைபேராணை என்ற சொற்களை நாம் சொல்லலாம்நின்ற - நிலைத்த பொருள்எப்பொழுதும்,  ஆறு - நதிநீர் வழி


தீ என்பது எப்போது எரிந்தாலும் அதில் கரித்துகள்கள் (carbon) மற்றும் கருமை வருவதை தடுக்க இயலாதுஆனால் இறைவன் தீயாக இருந்தாலும்அதாவது அக்னியாக ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும் அதில் கருமை மற்றும் கரித்துகள்கள் இல்லாமல் மாசற்றவனாககருமை அற்றவனாகமங்காதபேரொளியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான் என்று மாசற்ற சோதி  என்ற வரியில்  மாணிக்கவாசகர் கூறுகிறார்இறைவன் திருவண்ணாமலையில் அக்னியாக தோன்றியவன் ஆனதால் மாணிக்கவாசகர்  இங்கே, மலர்ந்த மலர்ச்சுடரே என்று குறிப்பிடுகிறார்அதாவது தோன்றிய பிரகாசமான ஒளியே என்று இறைவனை வர்ணிக்கிறார்மேலும் அவர் இறைவனைபெரியோனேஒளிமயமானவனேதேனேஅரிய அமுதமாக இருப்பவனே , சிவபுரம் என்கிற நகரத்தை சேர்ந்தவனே என்றெல்லாம் தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே என்ற வரியில் வர்ணிக்கிறார்தேன் என்று ஏன் சொல்லி இருக்கிறார் என்றால் அதற்கு இணையான வேறு திரவம் உலகில் இல்லைஅதுமட்டுமல்ல தேனை நம்ம செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாதுஎனவே மாணிக்கவாசகர்இங்கு இறைவனை தேனே என்று சொல்வது மிகப் பொருத்தமானதாகும்அதேபோல் அமுதம் என்று குறிப்பிடும் பொழுது வெறும் அமுதம் என்று குறிப்பிடாமல் அரிய அமுதம் என்று குறிப்பிட்டுள்ளார்அதாவது தேவர்களுக்கு கிடைத்த அமுதம் இவன் இல்லைஅதை விடவும் அரிய அமுதம் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்மாணிக்கவாசகர் தேர்ந்து எடுத்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் மிக ஆச்சரியமாய் இருக்கிறதுஉலகத்தில் நமக்குத் தெரிந்த பொருட்களில்மிக உயரிய பொருட்களைக் கொண்டே மாணிக்கவாசகர் இறைவனை வர்ணித்திருக்கிறார்ஆணவம்கர்வம்இல்வாழ்க்கை போன்றவற்றையெல்லாம் அறுத்து அதாவது அவைகளை நம்முள் இல்லாமல் செய்கிறான் என்று “பாசமாம் பற்று அறுத்துப்  என்பதன் மூலம் சொல்கிறார் மாணிக்கவாசகர்பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல்ஆரியன்  என்றால் கழைக்கூத்தன் என்று பொருள்மனிதர்களின் பிறவித் தளையை அறுத்துநம்மை பிறவிச் சூழலில் இருந்து விடுவித்த சந்தோஷத்துடன் சிவனவன் நடுஇரவில் கழைக்கூத்தாடுகிறான் என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்சிவன் நடுஇரவில் சாம்பலைப் பூசிக்கொண்டுகழைக்கூத்தாடுவதற்கான காரணம் புரிந்த பொழுதுநம்முடைய இறைவன் சிவன்நம் மேல்உயிர்கள் மேல் எத்தனை அன்புடன் இருக்கிறான் என்று புரிந்த பொழுது கண்ணீர் கசிந்ததுநம்மேல்,  உயிர்கள் மேல் அன்பாய் இருக்கும்,  அந்த அற்புதமான இறைவன்  மேல்நாமும் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வோம்நம் குழந்தைகளுக்கும் இறைவன் மேல் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்போம்இறைவன் என்பவன்நம்முடனேநம்முள்ளேநமக்காக தாயாய் தந்தையாய்தோழனாய் தோழியாய்குருவாய் நமக்கு பலவிதமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறான்அதனை நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் உணர்வதற்கு சொல்லிக் கொடுப்போம்சிவபுராணத்தை திருவாசகத்தைகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்திருவாசகம் என்ன கொடுக்கும்காசு கொடுக்குமாவீடு கொடுக்குமாகார் கொடுக்குமாஎன்று கேட்பவர்களுக்குஇவை அனைத்தும் உள்ள அனேகம் பேரை நம் வாழ்வில் சந்திக்கிறோம்ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு முழுமை அடையாமல்நிறைவு அடையாமல்இருப்பதைதான் நாம் பார்க்க முடியும்இறைவனை உணரும் பொழுதுமனம் அடங்கும், “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க” என்கிற வரியின் பொருள் புரியும்இந்த நிறைவைதிருப்தியை எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகளுக்கு வலிமை கிடையாதுஇதை அனுபவிக்கும் பொழுது மட்டுமே புரிந்து கொள்ள முடியும்இனி ஒவ்வொரு முறையும் “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்று பாடும்பொழுதுபடிக்கும் பொழுது நம் மனக்கண்முன்  நமக்காய் கழைக்கூத்து ஆடும் இறைவன் தெரியட்டும்இறைவனின் அன்பு புரியட்டும் .  இறைவன் நம் மேல் ஆர்வம் கொண்டு நம்முடைய கபடம்பொய்மாயை எல்லாவற்றையும் நீக்குகிறான் என்பதை நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட என்கிற வரியில் மிக அழகாக மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்அதுமட்டுமல்லாது நாம் பிறவிக் கடலை கடப்பதற்காக மிகப்பெரிய தெப்பமாய்மிதவையாய் அவனுடைய பெருங்கருணை என்கிற பெரிய ஆற்றில் நமக்காக எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறான் என்றுபேராது நின்ற பெருங்கருணைப் பேராறே என்கிற வரியில் மிக அழகாக பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர். “அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி” என்கிற வரிக்கு விளக்கமாக பெரும் நங்கூர கயிற்றினால்கப்பலைகரையில் நிலைநிறுத்த பிணைத்திருப்பது போல்,  நமது பிறவிஎண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற நங்கூர கயிற்றினால் பிணைக்கப்பட்டு நாம் பிறவிக் கடலை நீந்தி கடக்க முடியாமல்நம்மை கரையிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்று பார்த்தோம்பிறகு, “விலங்கு மனத்தால்” என்று பார்த்தோம் அதாவது மனம்எண்ணம் என்னும் தளைகளால்,விலங்கால் பிணைக்கப்பட்டு இருப்பதாகப் பார்த்தோம்பாராயணத்தின் மூலம்நாம ஜெபத்தின் மூலம் இந்த எண்ண தளைகளில் இருந்து விடுபட முயற்சி செய்வோம்அப்படி நம்முடைய எண்ண தளைகளில் இருந்துநாம் விடுபடும் பொழுது நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லபெரும் கருணையோடு இறைவன் காத்திருக்கிறான் என்பதை மாணிக்கவாசகர் மிக அழகாக “பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே” என்கிற வரியில் சொல்கிறார்இதுவரை நாம் பார்த்த சிவபுராணம் வரிகள் மட்டுமேநம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் மிக அழகாகஎளிமையாக சொல்லிவிட்டது.  


Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...