Skip to main content

சிவபுராணம் வரிகள் 91- 95 விளக்கம்

அல்லல் பிறவி அறுப்பானே என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 


அல்- உடல், பிறவி -  பிறப்பு, அறுத்தல் - நீக்குதல், இல்லாமற் செய்தல், 

- மடைமாற்றம், பாதை மாற்றம், அகத்தூய்மை  சொல்லற்கு - சொல் + அற்கு, சொல் -  உறுதிமொழி, அறிவித்தல் பறைசாற்றுதல், அற்கு - காலத்தினால் அழியாத, எப்பொழுதும் அழியாத, நிலைத்து நிற்பவன்,

அரிய - போற்றத்தக்கவன், சொல்லி - என்று கூறி, கீழ் -பூலோகம், மண்ணுலகம் ,

 சொல்லிய பாட்டின்  -  பாசுரம், பாடல்கள் , பொருள் - மெய்ப்பொருள், தலைமைப் பொருள்,  செல்வர் - அடைவர், உள் - சிறப்பான, மேன்மையான, ஆர் - அரிய, எல்லோரும் - சகலரும், அனைவரும் ஏத்தல் - போற்றித்துதித்தல், பணிந்து - வணங்குதல்,


நமக்கு மடைமாற்றம் செய்து, அதாவது அகத்தூய்மை செய்து, பாதை மாற்றி, ஆன்மா உடலுடன் பிறக்கும் பிறப்பை நீக்குபவன் இறைவன் என்று  சொல்கிறார் மாணிக்கவாசகர். “சொல்லற்கு  என்றால் காலத்தினால் அழியாத, என்றும் நிலைத்து நிற்கக்கூடியவன். “அரியானைஅன்பிற்குரியவன் என்று பொருள். இறைவன் காலத்தினால் அழியாதவன் என்றும் நிலைத்து நிற்பவன் இன்று உலகம் அறிய திருவாசகம் மூலம் மாணிக்கவாசகர் மிக உறுதியாக சொல்கிறார். “அரியஎன்றால், பலரும் அறியாத என்றும் ஒரு பொருள் வரும்.  அத்தகைய நிலைத்த பெருமையுடைய இறைவனை பலரும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார். கீழ் என்றால் மண்ணுலகம், திருவடிக்கீழ் என்றால் இறைவனின் திருவடிக்கு கீழே உள்ள மண்ணுலகத்தில் உள்ளவர்கள், திருவாசகத்தின் உண்மைப் பொருளான சிவனை உணர்ந்து திருவாசகத்தை படித்தால், சிவபுரத்தில் உள்ள மிக மேன்மையான சிவனின் திருவடிகளை அடைவார் என்றும் கூறுகிறார். அப்படி அடைந்தவர்களை மற்றவர்கள் எல்லோரும் போற்றித் துதித்து வணங்குவர் என்று உறுதி கூறுகிறார். திருவாசகத்தின் பொருள் சிவன் என்பதை மாணிக்கவாசகர் தில்லையம்பலத்தில் இறைவனுடன் கலந்து பொழுது அறிவித்தார் அதுமட்டுமன்றி அதையே இங்கு சிவபுராணத்தில்சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்என்று திரும்பவும் வலியுறுத்துகிறார். “நாதன் தாள் வாழ்கஎன்கிற வரியும் இறைவன் பாடலாக இருக்கிறான், தீயாக இருக்கிறான் என்று இரண்டு பொருள்படும் வகையில் சொல்லி இருக்கிறார்.  மாணிக்கவாசகரின் திருவாசகம் அன்பினால் உணரப்பட வேண்டிய ஒரு விஷயம் . சிவபுராணத்திற்கு நாம் பார்த்த விளக்கங்கள் அனைத்தும் என்னுடைய குருவின் வழிகாட்டுதலினாலும், தமிழ் அகராதியின் உதவியோடும், இறைவனை உணர்ந்து எழுதப்பட்ட ஒரு விளக்கம். நம் சிவபுராணம் குழுவுடன் இணைந்து சிவ புராணத்திற்கு விளக்கம் காண வைத்த, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் திருவடிகளையும், நமக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான், அவனை அன்பின் மூலம் வெளிக் கொணர முடியும் என்று மிக அழகாக, எளிமையாக நமக்கு திருவாசகம் மூலம் சொல்லியிருக்கும் மாணிக்கவாசகரின் திருவடிகளையும்,  சிவபுராணம் விளக்கம் எழுதுவதற்கு உந்துதலாக, வழிகாட்டியாக , என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என்னுடைய குருவான சாயின் திருவடிகளையும் பணிந்து, போற்றி வணங்குகிறேன்!


திருவாசகத்தை எத்தனையோ பேர் தொடர்ந்து பாராயணம் செய்து வருகிறார்கள். திருவாசகம் மட்டுமல்ல மற்றும் மகான்களின் சரித்திரம், சுந்தரகாண்டம் போன்ற பல புனித நூல்களை இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் பாராயணம் செய்து வருகிறார்கள். அவ்வாறு பாராயணம் செய்யும் பொழுதும், நம்மில் நிறைய பேருக்கு நிறைய பொருள் கஷ்டங்கள், மனக்கஷ்டங்கள் மற்ற விதமான வேதனைகள் என அவதிப்படுகிறோம். அப்பொழுது நமக்குள் என்ன பாராயணம் செய்து என்ன புண்ணியம் என்கிற மனச்சோர்வு தோன்றலாம்? நம்முடைய கர்மவினைகள் என்னவென்று நமக்கு தெரியாது. ஆனால் கஷ்டங்களை மட்டும் நாம் உணர்கிறோம். பாராயணம் செய்தும் கஷ்டங்கள் குறையாத பொழுது,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இறைவனே எனக்கு உதவு என்று வேண்டாதீர்கள். அதற்கு பதிலாக இப்பொழுது நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் என்றோ, யாரையோ, ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படுத்தி இருக்கிறோம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நமக்கு இன்று வலிப்பது போல அன்று ஏதோ ஒரு ஆன்மாவிற்கு வலித்திருக்கும். இன்று  நாம் அழுவது போல, அன்று அந்த ஆன்மா  அழுது இருக்கும் என்பதை உணர்ந்து அதற்காக முதலில் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று நமக்கு வலிக்கிறதே என்று அல்லாமல் அன்று யாரையோ தெரிந்தோ தெரியாமலோ அழ வைத்து விட்டேன் அந்த வலி இன்றுதான் எனக்கு புரிகிறது, அந்த தவறு இன்றுதான் எனக்கு புரிகிறது என்று இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்க வேண்டும்.  அந்த விழிப்புணர்ச்சி மன்னிப்பு கேட்கும் தன்மை நம்மிடத்தில் வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கை சூழலில், மனதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அந்த உணர்வுடன் நாம் செய்யும் பாராயணங்கள் நமக்கு கண்டிப்பாக மன நிம்மதியை அளிக்கும். அதுபோல நாம் அனுபவிக்கும் நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றிற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நாம் என்றோ யாருக்கோ நன்மை செய்து இருக்கிறோம் அதனால்தான் இன்று இந்த நன்மையை அனுபவிக்கிறோம் என்று நமக்குள் அடிக்கடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். தீதும்  நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர வேண்டும். நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே நம்முடைய கர்மா என்று உணர வேண்டும்.

முந்தைய பிறவிகளில் நாம் செய்த வினைப்பயனை இந்தப் பிறவியில் இன்பமாகவும் துன்பமாகவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பிறவியில் செய்யும் வினைக்கு கண்டிப்பாக, அடுத்து வரும் பிறவிகளில் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்துதான் ஆகவேண்டும். இன்பம் அதிகமாக இருக்குமா? துன்பம் அதிகமாக இருக்குமா? என்று யாராலும் சொல்ல இயலாது.  அதுமட்டுமன்றி இனி அடுத்து வரும் பிறவிகளில் ஏற்படும் கால மாற்றங்கள், அதனால் ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றங்களால், சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று இவையெல்லாம் கிடைக்குமா என்பது எல்லாம் கேள்விக்குறிதான். உணவே மருந்து என்கிற நிலைமாறி மருந்தே உணவு என்கிற நிலைதான் நமக்கு! பிறந்து, வளரும் பொழுது கல்விக்கு அலைச்சல், வளர்ந்தபின் வேலைக்கு அலைச்சல், பிறகு திருமண அலைச்சல் பிறகு குழந்தைகளுடன் போராட்டம் பிறகு முதுமையில் ஒரு போராட்டம் என எல்லா வயதிலும் வெறும் இன்பம் மட்டும் அமைவதில்லை. தனிமனித வாழ்க்கை போராட்டங்களுடன், இயற்கைச் சீற்றங்கள் என எத்தனை எத்தனையோ போராட்டங்கள் அத்துடன் இன்பங்களும் இருக்கின்றன. ஆமாம் எவ்வளவுதான் இன்பம் இருந்தாலும் சீக்கிரமாக அந்த இன்பம் தொலைந்து விடுகிறது ஏனெனில் அவைகள் நிரந்தர இன்பம் அல்ல. அனைத்து வசதிகளுடன் இருப்பவர்களும் கூட ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறார்கள். இந்தப் பிறவியே வேண்டாம் என்று நினைக்கும் பொழுது தான் இறைவனின்  அன்பும், அவனின் அன்பு தரும் பேரானந்தம் புரியும். 


அனைத்து விஷயங்களுக்கும் மூலகாரணம் கர்மா என்பதை உணர்ந்து செய்யும் பொழுது, நாம் திரும்பவும் மாயையில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு உதவிசெய்யும். இறைவனை உணர்வதற்கும் இந்த விழிப்புணர்வு உதவி செய்யும். இந்த விழிப்புணர்வு, நமக்குள் ஏற்பட்டுவிட்டால், கண்டிப்பாக கஷ்டங்கள் குறையும், அதுமட்டுமல்ல எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதில் மனம் பாதிக்கப் படாமல் அதைத் தாங்கும் சக்தி ஏற்படும். எவ்வளவு துன்பம் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு மன அமைதி கிடைக்கும். இதை அவரவர் செய்து பார்க்கும் பொழுது மட்டுமே உணர முடியும். விழிப்புணர்வுடன் பாராயணம் செய்வோம், மன அமைதி பெறுவோம். இறைவனை உணர்வோம்! ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...